பொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்
புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.
புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர். அதில் சஞ்சீவி நகர் கிராமத்தை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் குணசேகர் என்பவர் உயிரிழந்தார். கிராம மக்களால் மீட்கப்பட்ட மோகன் மற்றும் லோகேஷ் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த மூவரும் கடலில் மூழ்கியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story