ஆட்டை திருடிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து...

மணப்பாறை அருகே, ஆட்டை திருடிச் சென்றவர்கள் பயணம் செய்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து தப்பிக்க முயன்ற திருடர்களை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டி வடதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர், சின்னப்பன்...திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் தனது ஆடுகளை சின்னப்பன் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் ஆட்டை பிடித்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஆளுக்கொரு வாகனத்தில் ஆட்டோவை துரத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கடத்தல்காரர்கள் ஆட்டோவை அதிவேகமாக இயக்கியுள்ளனர். இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இதையடுத்து, ஆட்டோவில் இருந்த மூன்று பேரில், ஒருவர் மது போதையில் இருந்ததால், அவர் கீழே விழுந்தார். இருவர் மட்டும் ஓட்டம் பிடித்தனர். அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி ஒருவர் தப்பித்து விட, இன்னொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்