பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று முதல் வரும் 14ஆம் தேதி வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரண்டாவது நாளான இன்று வழக்கமான பேருந்துகள் 2275, சிறப்பு பேருந்துகள் 1466 என மொத்தம் 3 ஆயிரத்து 741 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று மாலை இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்