தொழிலதிபர் வீட்டில் 500 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை மாநகரில், தொழிலதிபர் வீட்டில் 500 பவுன் நகை, 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
மதுரை மாநகரில், தொழிலதிபர் வீட்டில் 500 பவுன் நகை, 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காமராஜபுரம் பகுதியை சேர்ந்த விறகு மண்டி உரிமையாளர் தங்கவேல் என்பவரது வீட்டில், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி கீரைத்துறை
காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த இணை ஆணையர் ஜெயந்தி தலைமையிலான போலீஸார். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக தங்கவேலின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 500 பவுன் நகை, 8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்