அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : தடை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 16 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : தடை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
x
மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 16 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார். வழக்கறிஞர்கள் திலீப்குமார், சரவணன், ஆனந்த் சந்திரசேகர் ஆகிய மூவரும் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக உயர்நீதி மன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்