பரிசு தொகுப்பு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்க வலியுறுத்தி தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
பரிசு தொகுப்பு தடை: தமிழக அரசு மேல்முறையீடு
x
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அனைவருக்கும் வழங்க அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. அதில்,  சர்க்கரை மட்டும் பெறும் ரேஷன்கார்டுகளை வைத்திருப்பவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், 10 லட்சம் அளவில் உள்ள அந்த கார்டுகளில், ஏற்கனவே 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள்  வருத்தத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்