விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு : மனிதாபிமானத்தை காட்டிய நீதிபதிகள்

காப்பீட்டு தொகையைக் குறைக்க கோரி, தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் திருப்புமுனையாக, தொகையை உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு : மனிதாபிமானத்தை காட்டிய நீதிபதிகள்
x
காப்பீட்டு தொகையைக் குறைக்க கோரி, தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் திருப்புமுனையாக, தொகையை உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில், சென்னை பூந்தமல்லியில், மகேஷ் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு 50 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, தானாக முன்வந்து இழப்பீட்டு தொகையை 67 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்