பொங்கல் சிறப்பு பரிசுத் தொகை - அரசாணை வெளியீடு...

பொங்கல் சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
x
வரும் திங்கட்கிழமை முதல் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்த சிறப்பு பரிசு தொகுப்போடு 1000 ரூபாயையும் சேர்த்து பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் சிறப்பு பரிசுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 10 பேருக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். அனைத்து அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்ட ஆயிரம் ரூழுாய் சிறப்பு பரிசுத் தொகைக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்