ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரே, ஜல்லிக்கட்டை நடத்தலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து
x
ஜல்லிக்கட்டை அமைதியாக நடத்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா விசாரித்தார். விசாரணையின் போது, மாவட்ட ஆட்சித் தலைவரே, ஜல்லிக்கட்டு விழா குழு தலைவராக செயல்பட்டு அதனை நடத்தலாமே என யோசனை தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டினை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்