உயர்மின் கோபுர விவகாரம்: "விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள்" - விவசாயிகள் கோரிக்கை

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண முன்வருமாறு விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.
x
13 மாவட்டங்களில், விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு, சுமூக தீர்வு காண முன்வருமாறு விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே நிர்வாகிகள் கூடி, ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் சண்முகம் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்