காட்டு முயல்களை வேட்டையாடியதற்கு ரூ.80,000 அபராதம்

சேலம் மாவட்டம்,மேட்டூர் சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் காட்டு முயல்களை வேட்டையாடிய 4பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காட்டு முயல்களை வேட்டையாடியதற்கு ரூ.80,000 அபராதம்
x
சேலம் மாவட்டம்,மேட்டூர் சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் காட்டு முயல்களை வேட்டையாடிய 4பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காட்டு முயல்களை பிடித்து, சங்ககிரி பகுதிகளில் உள்ள தாபா,  ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து , மேட்டூர் வனச் சரக அலுவலர் பிரகாஷ்   தலைமையிலான குழு  சங்ககிரி - குப்பனூர் பைபாஸ்  சாலையில் உள்ள தாபா ஹோட்டல்களில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது  பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் காட்டு  முயல்களை வேட்டையாடியது தொடர்பாக  4  பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்த 5 காட்டு முயல்களையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்