பிளாஸ்டிக் தடை எதிரொலி : துணிப்பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்...

தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் துணிப் பைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
x
தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் துணி பைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அரசின் உத்தரவை தொடர்ந்து துணி மற்றும் காகித பைகளுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக பை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 1 துணிப்பை பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருவதாகவும் பை தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். மாசு இல்லா சுற்றச்சூழலை ஏற்படுத்த வணிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது தங்களுக்கு கிடைத்துள்ள ஆர்டர்களில் இருந்தே தெரிவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்