கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் :மஞ்சள் காமாலை பாதிப்பு - கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை

எச்.ஐ. வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட சிவகாசி கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் :மஞ்சள் காமாலை பாதிப்பு - கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை
x
எச்.ஐ. வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட சிவகாசி கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மஞ்சள் காமாலை பாதிப்பை குணப்படுத்த தனி பிரிவில், கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சையில், நல்ல முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. எச்.ஐ,வி பாதித்த கர்ப்பிணி பெண்ணை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்துள்ள ஐவர் குழு, தமது பணியை துவக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்