போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - வங்கி ஊழியர் கூட்டமைப்பு

போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
x
வங்கிகள் இணைப்பு கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை - சேப்பாக்கத்தில் கூடிய வங்கி ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம்,  போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்