உயர்மின் கோபுரம் அமைக்க 10-வது நாளாக எதிர்ப்பு: சங்கு ஊதி செவண்டி அடித்து நூதனப் போராட்டம்...
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பத்தாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மூலக்கரை பிரிவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள், சங்கு ஊதி - செவண்டி அடித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 6 பெண்கள் உட்பட 11 விவசாயிகள் கடந்த 23 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு 2 பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளவர்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நாளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், போராட்ட களத்தில் உரையாற்ற உள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
Next Story