கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
x
கர்ப்பிணி  பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து அறிந்த மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்தார். அங்கு பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேரில் சந்தித்து, சம்பவம் குறித்து விசாரித்தார். உடன் சென்ற அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களும், சுகாதாரத்துறை செயலாளரிடம் முறையிட்டனர். பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்