கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
x
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள், ரத்த வங்கி பணியாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பேசிய அந்த பெண்ணின் கணவர், பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு, தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்