மருத்துவ படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்படும் - இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தகவல்

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் வினோத் கே பால் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்படும் - இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தகவல்
x
மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் வினோத் கே பால் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் வினோத் கே பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோத், இந்தியாவில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் பணிகள் முடிவடையும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்