கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .
x
* கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உரிய  நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

* கஜா புயலுக்கு  அரசு  அறிவித்த எந்த நிவாரண உதவியும்  பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை   முழுமையாக போய் சேரவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார். 

* திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்  நிவாரணப் பொருட்கள் வழங்க கோரி நடத்தி வரும் போராட்டங்கள் ஓயவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசும், அக்கட்சி எம்.பிக்களும் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்  ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்