ஸ்டெர்லைட் விவகாரம் : "தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏற்புடையது அல்ல" - சரத்குமார்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏற்புடையது அல்ல என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏற்புடையது அல்ல என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ள தமிழக அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். தரம்வாய்ந்த வெளிநாட்டு ஆய்வகங்கள் மற்றும் சர்வதேச வல்லுனர்களின் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்மையான ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்
Next Story