ரவுடிகளால் ஆரம்பிக்கப்பட்ட 'சண்டியர் வாட்ஸ் அப் குழு' : எச்சரிக்கை விடுத்த எஸ்.ஐ

ரவுடிகளால் ஆரம்பிக்கப்பட்ட 'சண்டியர் வாட்ஸ் அப் குழு' : எச்சரிக்கை விடுத்த எஸ்.ஐ
x
கோவில்பட்டியில் ரவுடிகளை ஒருங்கிணைத்து சண்டியர் வாட்ஸ் அப் குழு ஒன்று துவக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஆலோசிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவுடி ஒருவரை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, அவரின் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவரின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அந்த வாட்ஸ் அப்
குழுவில் இருந்த பலரும் வெளியேறினர். 

Next Story

மேலும் செய்திகள்