உயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்
தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மதுரை, திருமங்கலம் அருகே கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தலைமறைவாகியிருக்கிறார். அவரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் பூமிநாதன் செல்போனில் பேசியபோது, தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் கட்சியினரின் வேட்பு மனுக்கள் தவிர, பிற கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கடந்த 10 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story