கோவில் கிணற்றில் பொங்கி வரும் தண்ணீர்...

தண்ணீரை பாட்டில்களில் எடுத்துச்செல்லும் பக்தர்கள்.
x
தஞ்சை மாவட்டம் திருமாந்துரையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அட்சயநாதசுவாமி கோயில் உள்ளது.  3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள கிணற்றில் திடீரென தண்ணீர் பொங்கி வரத் துவங்கியுள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியதையடுத்து சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பலரும் சந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த கிணற்று நீரை பாட்டில்களில் எடுத்துச்செல்லவும் துவங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்