பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளை தி.மு.க.தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில்  மறைந்த தி.மு.க. தலைவர்கள்  அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலைகள்  பீடத்தில் வைக்கப்பட்டன. நாட்டில் உள்ள  கட்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டு உள்ள கொடிக் கம்பங்களில், மிக அதிக உயரமான கொடி கம்பமாக, 116 அடி உயரமுள்ள கொடிக் கம்பமும் அண்ணா அறிவாலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  நேரில் பார்வையிட்டார். வரும் 16 ஆம் தேதி  அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவரான சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். இதனிடையே, புதிய கொடிக் கம்பத்தில் புனேவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தி.மு.க. கொடி பறக்க விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்