புயல் பாதித்த பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவவில்லை - ராதா கிருஷ்ணன்

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் மற்றும் மூளைக்காய்ச்சல் பரவுவதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் மற்றும் மூளைக்காய்ச்சல் பரவுவதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 26 ஆயிரம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு  இதுவரை 8 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு தஞ்சையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்