தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...
தினத்தந்தி சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் மேற்படிப்பை தொடர்வதற்கு வசதியாக 'தினத்தந்தி' நிறுவனம், கல்வி நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 34 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இதன்படி, நாமக்கல் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கலந்துகொண்டு, 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
Next Story