வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...

ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
x
கோவை மாவட்டம்  கரடிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு,  மாடுகளை அடித்து கொன்றது.இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் 10 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. அதை வேனில் ஏற்றி கொண்டு சென்று  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். கூண்டை திறந்ததும் சிறுத்தை சீறிப் பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

Next Story

மேலும் செய்திகள்