தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதியில், இதுவரை யாராவது மேல் முறையீடு செய்துள்ளார்களா என கேட்டு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
x
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதியில், இதுவரை யாராவது மேல் முறையீடு செய்துள்ளார்களா என கேட்டு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள சத்ய பிரதா, இதுவரை யாரும் மேல் முறையீடு செய்யவில்லை என கடிதம் அனுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு மற்றும் திருவாரூர் தொகுதி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் மேல் முறையீடு செய்வதற்கு, வரும் ஜனவரி 25 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்