செவிலியரிடம் நகையை பறிக்க முயற்சி : வழிப்பறி கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தனியாக சென்ற செவிலியரிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையனை பொது மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
செவிலியரிடம் நகையை பறிக்க முயற்சி : வழிப்பறி கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
x
ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தில் தனியார் மருத்துவ மனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் கலாதேவி நேற்றிரவு பணியை முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பரிசல்துறையை சேர்ந்த சங்கர், கலாதேவியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். நகையை கையில் பிடித்து கொண்டு கலாதேவி சப்தம் போட்டுள்ளார். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததுடன், மலையம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்