அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா?

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா?
x
* புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

* இந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நாளை  பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

* மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடையே நாளை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில், வேலை நிறுத்த அறிவிப்பு  ரத்தாகுமா, அல்லது திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்  நடைபெறுமா என்பது குறித்து தெரிய வரும்.

* இந்த நிலையில் முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்