நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது வழக்கு பதிவு

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது வழக்கு பதிவு
x
நடிகர் விஷாலுக்கும் தன் வீட்டருகே உள்ள பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக சென்னையை சேர்ந்த விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். me too என்ற இயக்கத்தின் மூலமாக அந்த புகாரை தெரிவித்ததோடு 16 வயது சிறுமி குறித்தும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பதிவிட்ட விஸ்வதர்ஷினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் ஆணையத்தில் அந்த சிறுமி புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறைக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணை நடத்தி விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்