கஜா புயல்: முகாமை விட்டு செல்ல மறுக்கும் மக்கள் - பள்ளிகள் திறக்க முடியாமல் தவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட முகாம்களில் தொடர்ந்து மக்கள் தங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளது.
x
புயல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீடுகளை இழந்து ஒன்றரை லட்சம் மக்கள் 205 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலான முகாம்கள், பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில், முகாம்கள் உள்ள பள்ளிகள் தவிர்த்து, அனைத்து பள்ளிகளும் 23ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில், முத்துப்பேட்டை,திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில்  இன்னமும் பள்ளிகளை திறக்க முடியவில்லை. இதுகுறித்து முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களிடம் கேட்டபோது, வீடுகளில் கடுமையாக சேதமடைந்துள்ளதால், போக முடியாத சூழ்நிலை என்று தெரிவித்துள்ளனர். விரைவில் அரையாண்டு தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், இப்பகுதி பள்ளி மாணவர்களின் கல்வியையும் கஜா புயல் கேள்விக்குறியாக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்