புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம் தாங்கள் கெஞ்சி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம், தாங்கள் கெஞ்சி வருவதாக தெரிவித்தார். மேலும் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்