புயல் பாதித்த மக்களுக்கு 6 வயது சிறுமி உதவி

தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 12 ஆயிரத்து நானூற்று நான்கு ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணமாக ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புயல் பாதித்த மக்களுக்கு 6 வயது சிறுமி உதவி
x
கோவையை சேர்ந்த சிவக்குமார், மீதா தம்பதியரின் 6 வயது மகள் தமிழினி. புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக தொடர்பாக தந்தை தனது நண்பர்களுடன் பேசியதை கேட்ட சிறுமி தமிழினி, தான் சேமித்து வைத்திருந்த பணத்தை தருவதாக கூறி தனது உண்டியலை தந்தையிடம் கொடுத்துள்ளார்.  பின்னர் உண்டியலை உடைத்து பார்க்கும் போது அதில் 12 ஆயிரத்து நானூற்று நான்கு ரூபாய் இருந்துள்ளது. இந்த பணத்தை கடந்த 2 வருடங்களாக சிறுமி தமிழினி சேமித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

மேலும் செய்திகள்