காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
x
சென்னை அரும்பாக்கத்தில் காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மற்ற மாவட்ட காவலர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்