ரஷ்ய தொழில்நுட்பத்தில் பயிரிடப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்கள் புயலால் சேதம்
கஜா புயலால் மண்டையூர் வடகாடு பகுதியை சேர்ந்த வேலு அமைத்த பசுமை குடில் சேதமடைந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 70 லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்கள் சேதமடைந்தன.
திருச்சி மாவட்டம் மாத்தூரை அடுத்துள்ள மண்டையூர் வடகாடு பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பசுமை குடில் அமைத்து ரஷ்ய தொழில்நுட்பத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் குடை மிளகாய்களை பயிரிட்டிருந்தார். கஜா புயலால், அவர் அமைத்த பசுமை குடில் சேதமடைந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 70 லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்கள் சேதமடைந்தன. இதனால் வேதனையடைந்த வேலு தகுந்த இழப்பீடு வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story