மன்னார்குடியில் மதுக்கடை மூடிய நிலையிலும் மது விற்பனை அமோகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடியில் மதுக்கடை மூடிய நிலையிலும் மது விற்பனை அமோகம்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. திருவாரூர், நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மன்னார்குடியில் 4 நாட்களாக டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையிலும், வெளிக்கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்