அரசியல் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல் : தொழிலதிபரை மிரட்டிய விசிக நிர்வாகி கைது

கரூர் அருகே அரசியல் கட்சி மாநாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தொழிலதிபரை மிரட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அரசியல் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல் : தொழிலதிபரை மிரட்டிய விசிக நிர்வாகி கைது
x
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனம் ஒன்றை சுரேஷ் பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு கடந்த சனிக்கிழமை 8 பேர் கொண்ட குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பாஸ்கரன் வந்துள்ளார். அப்போது கட்சியின் அரசியல் மாநாடு நடக்க இருப்பதாகவும், இதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். பணத்தை தராவிட்டால் நிறுவனத்தை கொளுத்தி விடுவோம் எனவும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக சுரேஷ் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை கைது செய்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவருடன் வந்த 8 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்