லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சீதாராம் மேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சீதாராம் மேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Next Story