குழந்தை பெற்ற 18 நாளில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை...

மதுரை அருகே, 18 நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்ற பெண்ணை, அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொலை செய்ததாக, பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழந்தை பெற்ற 18 நாளில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை...
x
* மதுரை திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், ஆண்டிபட்டியைச் சேர்ந்த மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, கடந்த 18 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மீனா தூக்கில் சடமாக தொங்கியுள்ளார். குழந்தை அழுது கொண்டிருக்கும் சப்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், மீனா தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீனாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 


* மீனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், கணவர் மணிகண்டனும் அவரின் தாயாரும், வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப் படுத்தி வந்ததாகவும், அவர்கள் தான் தன் மகளை கொன்று தூக்கில் தொங்கவிட்டதாகவும், மீனாவின் தந்தை ராஜகோபால் புகார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்