குடிநீர், சமைக்க உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
குடிநீர், சமைக்க உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
x
கஜா புயல், கரையை கடந்து 2 நாட்கள் முடிந்த நிலையில், பெரும்பாலான கிராமங்களில் மக்கள் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால்,  துண்டிக்கப்பட்ட மின்விநியோகமும் இன்னும் சீரடையவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். வீரன்குடிகாடு, வடக்கு பொய்கை நல்லூர் கிராமங்களில் பெருமளவு மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இதனிடையே குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் மீது விழுந்த மரங்களை , மக்களே வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் யாரும் இதுவரை வர வல்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், நியாய விலை கடைகள் மூலம் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...



Next Story

மேலும் செய்திகள்