மழை நீர் செல்லும் வகையில் குளங்கள் சீரமைப்பு - பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம்

கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில், கும்பகோணம் கோட்டத்தில் 173 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட புயல் பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம் தெரிவித்துள்ளார்.
மழை நீர் செல்லும் வகையில் குளங்கள் சீரமைப்பு - பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம்
x
கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில், கும்பகோணம் கோட்டத்தில் 173 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட புயல் பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை நீர் தங்கு தடையின்றி நிரம்பும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும் மெஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்