தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பரில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் பின்லாந்துக்கு டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்கள் அனுப்பி வைக்கபடுவார்கள் என்றும், கனடா , சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தலா 25 மாணவர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார். சிறப்பாசிரியர் பணிநியமன முறைகேடு தொடர்பான விசாரணைக்கு நான்கு வாரக் காலம் அவகாசம் வழங்கபட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்