முகநூல் மூலம் இணைந்த கள்ள காதலர்கள் : சென்னை விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

கள்ளக் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகநூல் மூலம் இணைந்த கள்ள காதலர்கள் : சென்னை விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி
x
* பொள்ளாச்சியை சேர்ந்த 55 வயதான தர்மலிங்கத்துக்கும், இலங்கை கண்டியை சேர்ந்த 45 வயதான மனோரஞ்சிதம் என்பவருக்கும் இடையே முகநூலில் நட்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவருக்கும் பிள்ளைகள் உள்ள நிலையில், சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த மனோரஞ்சிதம், தனியாக வீடு எடுத்து தர்மலிங்கத்துடன் தங்கியுள்ளார். 

* இதற்கிடையே, சுற்றுலா விசா முடிவடைய இருந்ததால், ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி,  தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் முன்பு இருவரும் பாய்ந்ததில், தர்மலிங்கம் உயிரிழந்தார். சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்த மனோரஞ்சிதத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்