"கஜா" அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
கஜா அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள "கஜா" புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 840 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகம் நோக்கி வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை -சென்னை இடையே 15 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்