தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது கஜா புயல்...
கஜா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்.
* வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு "கஜா" என பெயரிடப்பட்டுள்ளதாக , இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்க்கடலில் உருவான "கஜா" புயல் சின்னம் வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகம் நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* இது, தற்போது சென்னைக்கு வடகிழக்கே 990 கிலோ மீட்டரில் கடலில் மையம் கொண்டிருப்பதாகவும், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழகம் நோக்கி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* வரும் 15ஆம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்றும், இதனால் வரும் 14ம் தேதி மாலை முதல் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Next Story