வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது.
வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...
x
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது. இங்கு குழந்தைகளை கவரும் விதமாக, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களில் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளின் உருவப்படங்கள் த‌த்ரூபமாக வரையப்பட்டு அதன் அருகே ஆங்கிலம் மற்றும் தமிழில் அந்தந்த விலங்குகள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. விரைவில் இந்த பூங்காவில் சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்