நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
அதிகாலையிலேயே எழுந்த பொதுமக்கள், எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுமண தம்பதியினர் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முக்கிய சுற்றுலாதளங்களில், ஏராளமானோர் கூடுவர் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story