விபத்தில் காயமடைந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர் : பொதுமக்கள் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விபத்தில் காயமடைந்தவரை காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர் : பொதுமக்கள் பாராட்டு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விபத்தில் காயமடைந்தவரை காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கரிகாலன் என்பவர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, மனைவியுடன் மன்னார்க்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயங்களுடன் கரிகாலன் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் கண்ணன், அவசர ஊர்திக்காக காத்திருக்காமல், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்