53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வாழ்த்து

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னையில் 53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வாழ்த்து
x
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு  மற்றும் கீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னையில் 53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழச்சியில் கலந்து கொண்டது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பாக ஆளுநர் தெரிவித்தார். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மாற்று திறனாளிகள் என்று குறிப்பிட்ட ஆளுநர், தமிழகத்தில் சுமார் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்று திறனாளிகள் உள்ளதாக கூறினார். வங்க கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் கவிதையை வாசித்த ஆளுனர் மாற்று திறனாளிகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்